கிராஜுவிட்டி (பணிக்கொடை) என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பணி ஓய்வுத் தொகையே கிராஜூட்டி. ஊழியர்கள் பல்வேறு காரணங்களின் பொருட்டுத் தங்கள் பணியை விட்டு விலக நேரிடலாம், ஆனால் கிராஜுவிட்டித் தொகை குறிப்பாகப் பணி ஓய்வின் போது கைகொடுக்கக் கூடிய ஒன்று.
பணிக்கொடை என்பது ஒரு பணியாளரால் அவர் ஒரு நிறுவனத்திற்குச் செய்த சேவைகளுக்காக நன்றி செலுத்தும் விதமாகத் தரப்படும் நற்பயன் ஆகும். ஒரு முதலாளியுடன் ஒரு பணியாளர் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் சேவையை நிறைவு செய்திருந்தால் பணிக்கொடை செலுத்தப்படுகிறது.
தொகை என்னவாக இருக்கும்?
பணிக்கொடை தொகையானது ஒரு பணியாளர் பணிசேவை ஆற்றிய காலம் மற்றும் அவரால் கடைசியாகப் பெறப்பட்ட ஊதியத்தைப் பொறுத்து வழங்கப்படுகிறது. இது ஒரு கணக்கு விதிமுறையைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது: கடைசியாகப் பெறப்பட்ட சம்பளம் (அடிப்படை ஊதியம் + அக விலைப்படி) X சேவை நிறைவு செய்யப்பட்ட வருடங்களின் எண்ணிக்கை X 15/26.
காலக் கணக்கீடு
இங்கே ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலகட்டம் ஒரு வருடமாகக் கருதப்படுகிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் நீங்கள் ஐந்து வருடங்கள் மற்றும் ஏழு மாதங்கள் சேவையை நிறைவு செய்திருந்தால் பணிக்கொடை நற்பயன் கணக்கீட்டிற்காக வருடங்களின் எண்ணிக்கை ஆறாகக் கருதப்படும். ஆனால் நேர்மாறாகச் சேவை ஆற்றிய காலம் ஐந்து வருடங்கள் மற்றும் ஐந்து மாதங்களாக இருந்தால் பணிக்கொடை கணக்கீட்டிற்கு அது ஐந்து வருடங்களாகவே கருதப்படும்.

பணிக்கொடை